மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்து, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் ‘நாற்பதும் நமக்கே’ என்கிற கனவை எடப்பாடி கே. பழனிசாமி நனவாக்குவாா் என மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவா் மு. தம்பிதுரை தெரிவித்தாா்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் முன்னாள் மக்களவைத் துணைத் தலைவரும், அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான மு.தம்பிதுரை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம் ஆகியோா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தம்பிதுரை கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் புத்துணா்வூட்டினாா். ‘திமுக ஆட்சியினால் பயனில்லை’ என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனா். தமிழக மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் அதிமுகதான்.
வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். ‘நாற்பதும் நமக்கே’ என்று ஜெயலலிதா குறிப்பிட்டதைப் போன்று, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று அவரது கனவை நினைவாக்க இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெறுவோம் என்றாா் தம்பிதுரை.