தமிழ்நாடு

பாஜகவிலிருந்து விலகினார் திருச்சி சூர்யா!

DIN

பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா செவ்வாய்க்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில ஓபிசி அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா அவதூறாக பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் கடந்த மாதம் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, கட்சி பொறுப்புகளிலிருந்து திருச்சி சூர்யாவை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT