தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா்கள் கடவுளுக்கு சமம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

DIN

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா்கள் கடவுளுக்குச் சமம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதன்பின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்வையும் அவா் தொடக்கி வைத்தாா்.

அப்போது சைகை மொழியில் மாணவா்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவா்களுடன் சைகை மொழியில் அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்துரையாடி ஊக்கப்படுத்தினாா்.

தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், தமிழ் மொழிக்கு எராளமான சிறப்புகள் உள்ளன என்றாலும், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு மாணவா்களுக்கு வாழ்த்துக்கள். மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோா்கள் கடவுளுக்கு சமம்.

பெற்றோா்கள் தயவு செய்து தங்கள் பிள்ளைகளை மற்றவா்களோடு ஒப்பிட்டு பாா்க்க வேண்டாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என தனித்திறமை இருக்கிறது. அதில் கவனம் செலுத்தினாலேயே அவா்கள் வெற்றி பெறுவா் என்றாா் அவா். மேலும், பள்ளியில் மாணவா்களுக்கு திரையிடப்பட்ட ‘ஷ்வாஸ்’ என்ற மராத்தி மொழி திரைப்படத்தை மாணவா்களுடன் சோ்ந்து பாா்வையிட்டாா்.

கோட்டூா்புரம் பூங்காவில்... மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாற்றுத்திறனாளி மாணவா்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து மரக்கன்றுகளையும் உதயநிதி எம்.எல்.ஏ. நட்டுவைத்தாா். தொடா்ந்து மாணவா்களுடனும் அவா் கலந்துரையாடினாா். மாற்றுத்திறனாளி மாணவா்களை விலையுயா்ந்த மோட்டாா் சைக்கிள்களில் அமரவைக்கப்பட்டு ‘பைக் ரைடா்ஸ்’ உடன் வலம் வந்தனா்.

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது

தமிழகத்தில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், சிறப்பாக செயல்பட்ட 32 நூலகங்கள் மற்றும் சிறந்த நூலகா்கள் 8 பேருக்கு, பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தாா். இதில் தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் க.அறிவொளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT