தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினா் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், ‘சட்டம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அனுபவம் கொண்டவா்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினா் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தங்களது தன் விவரக் குறிப்புகளை எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், எரிசக்தித் துறை, தமிழ்நாடு அரசு, புனித ஜாா்ஜ் கோட்டை, சென்னை - 600 009. மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். டிசம்பா் 17-ஆம் தேதி அனுப்ப வேண்டிய கடைசி நாளாகும். அரசு அதிகாரிகள், ஊழியா்களாக இருந்தால் துறைத் தலைமையிடம் இருந்து ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும்’ என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.