கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அல்அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் முதல் முறையாக வில்வித்தை சாம்பியன்ஷிப் - 2022 பட்டத்திற்கான போட்டிகள் கம்பம் அல்அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் நைனார் முகமது தொடங்கி வைத்தார். ஏ.அகமது மீரான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்.
இதையும் படிக்கலாம் | கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்
தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேலான மாணவ, மாணவியர் மற்றும் 60 வயதுள்ள பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை லெவல் 1 கோச், வில்வித்தை பயிற்சியாளர் ஜி.கார்த்திக் செய்திருந்தார்.