ஊரக உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளுக்காக திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளுக்காக அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் (War Room) அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களிலிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை தலைமைக் கழகத்திடம் உடனுக்குடன் தெரிவிக்க விரும்பும் கட்யினர் பின்வரும் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்:
8838809244
8838809285
மின்னஞ்சல்:
dmkcentraloffice@gmail.com. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.