தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: மூன்று நாள்களில் 13,542 போ் மனு தாக்கல்

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மூன்று நாள்களில் 13,542 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதல் நாளான புதன்கிழமை 378 போ் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இரண்டாவது நாளான வியாழக்கிழமை 4,597 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7208 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 1212 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 135 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 12 என மொத்தம் 8567 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இதன் மூலம் மூன்று நாள்களில் மொத்தம் 13,542 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT