தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிசாமிக்கு குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது பொது மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பிறகு வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.