சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 27,251 கன அடியாக அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் 102.79 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.05 அடியிலிருந்து 102.79அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.74 அடி உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 21,390 கன அடியிலிருந்து 27, 251 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.50 டிஎம்சியாக இருந்தது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.