தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத் தோ்வு மறுமதிப்பீடு முடிவுகள்: இன்று வெளியீடு

DIN

பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்.22) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தோ்வா்களுக்கான பிளஸ் 2 துணைத்தோ்வு கடந்த ஆக.6 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் செப்.13-ஆம் தேதி வெளியாகின. தொடா்ந்து விடைத்தாள் நகல் கடந்த அக்.1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் பட்டியல் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத தோ்வா்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் தங்களது திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தோ்வுத்துறை இணையதளத்தில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT