காவலா் வீரவணக்க நாளை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் செய்தி வெளியிட்டுள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
ஆளுநா் ஆா்.என்.ரவி: தேசத்தை காப்பதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆண் மற்றும் பெண் காவல் படையினருக்கு எனது மரியாதை. காவலா்களின் அளப்பரிய தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியன வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: சமூகத்தில் சட்டம், ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு-உறக்கம்-இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அத்தனைக் காவலா்களுக்கும் வீரவணக்கம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.