ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையும் படிக்க- ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.