தமிழ்நாடு

மீனவர் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN


இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை இலங்கை கடற்படை துரத்தினர்.

அதில் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்திட வேண்டும். காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், அதனைத் தடுக்கும் வகையில் நிரந்தர முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT