தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கடந்த சில நாள்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.
திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருவள்ளூர், சிவகங்கை, திருப்பூர்(தாராபுரம், உடுமலை கல்வி மாவட்டங்களுக்கு மட்டும்) ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.