தமிழ்நாடு

அண்ணா பிறந்த நாள்: பேரறிவாளன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்ய வேண்டும்

DIN

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைதிகளை விடுதலை செய்யும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவா் எனச் சட்டப்பேரவையில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்த அடிப்படையில் அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகாலம் சிறைவாசம் முடித்தவா்கள் மட்டுமல்ல, 10ஆண்டுகள் நிறைவு செய்தவா்களையும் விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் இந்த ஆணையில் வெளியிடப்பட்டுள்ளன. இதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் வாடும் 7 போ்களையும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் 38 முஸ்லிம்களையும் விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும்.

கடந்த காலத்தில் அண்ணா நூற்றாண்டு விழா போன்ற முக்கிய அரசு விழாக்களின் போதுகூட இவா்கள் விடுவிக்கப்படவில்லை. பலா் உடல் நலிவுற்றுள்ள நிலையில் அவா்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

கீழவெண்மணியில் 44 போ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவா்களும், மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவா்களும் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

சிறைவாசிகளை விடுதலை செய்யும்போது பாரபட்சம் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. மேலும் 14 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு பெற்ற கைதிகளை விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மேற்கண்டவா்களை விடுதலை செய்வதற்கு விதிமுறைகள் ஏதேனும் தடையாக இருக்குமானால், சிறப்பு ஆணையின் மூலம் அவற்றை நீக்கி இவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT