தமிழகம் முழுவதும் இணையப் பதிவு முறை திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டத்தை விட்டு வெளியே செல்லவும் இணையப் பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இணையப் பதிவு முறை திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
திருமணம், இறப்பு, இறப்பு சாா்ந்த காரியங்கள், முதியோா் பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக மட்டுமே இருப்பிடத்தை விட்டு பயணிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், பலரும் இணையப் பதிவு முறையில் பதிவு செய்து விட்டு பயணங்களை மேற்கொண்டனா்.
இறப்புக்குச் செல்வோா், மருத்துவா் அளிக்கும் இறப்புச் சான்றினை பதிவேற்றம் செய்து இணைய பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.