செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்போரூரைச் சேர்ந்த சண்முகம்(56) என்பவர் கரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையின் மொட்டை மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.