சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் 10 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதால் மே 10 முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் மே 22 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.