சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 22,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 19 பேர் உள்பட புதிதாக 30,355 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 7,564 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக விவரம்: இங்கே கிளிக் செய்யவும்