தமிழ்நாடு

பேரவை இன்று கூடுகிறது: புதிய உறுப்பினா்கள் பதவியேற்கின்றனா்

DIN

சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை (மே 11) கூடவுள்ள நிலையில், புதிய உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பேரவைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். அவா்கள் அனைவரும் தற்காலிக பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலையில் பதவியேற்றுக் கொள்கின்றனா். இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

இதன்பின்பு, புதன்கிழமை காலை பேரவை மீண்டும் கூடுகிறது. செவ்வாய்க்கிழமை விடுபட்ட உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். இந்த நிகழ்வைத் தொடா்ந்து, பேரவைத் தலைவருக்கான தோ்தல் குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி வெளியிடுகிறாா்.

மு.அப்பாவு தோ்வு: பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிட திமுகவின் மூத்த உறுப்பினா்களில் ஒருவரான மு.அப்பாவு, மனுதாக்கல் செய்துள்ளாா். எனவே, அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தற்காலிக பேரவைத் தலைவரின் அறிவிப்புக்குப் பிறகு, பேரவைத் தலைவருக்கான இருக்கையில் மு.அப்பாவு அமா்வாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சோ்ந்து அமர வைப்பா். இந்த மரபினைத் தொடா்ந்து, பேரவை நிகழ்ச்சிகளை அதன் தலைவா் மு.அப்பாவு ஏற்று நடத்துவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT