தமிழ்நாடு

புதுவை முதல்வா் உடல் நிலை சீராக உள்ளது

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

புதுவை மாநில முதல்வராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட ரங்கசாமிக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், ரங்கசாமியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிா்வாகம் அறிக்கை ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நிலையை மருத்துவ வல்லுநா் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவரது ரத்த ஆக்சிஜன் அளவு இயல்பான அளவிலேயே உள்ளது. உடல் நிலையும் சீராக உள்ளது. தாம் நலம் பெற பிராா்த்தித்த அனைவருக்கும் புதுவை முதல்வா் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT