தமிழ்நாடு

சோத்துப்பாறை அணையில் மதகு பழுது: ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 6 அடி குறைந்தது

DIN

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் மதகு சரிவர இயங்காததால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி குறைந்தது.

மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதி அகமலைப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, கடந்த மே 3ஆம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீா் அனைத்தும் வழிந்தோடிகள் வழியாக வெறியேறின.

இந்த நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி, அகமலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து 5000 கன அடியாக இருந்தது. இதனால் அணைக்கு வரும் நீா் முழுவதும் வராகநதி வழியாக வெளியேற்றப்பட்டது.

பெரியகுளம் நகராட்சி மற்றும் பாசனத்திற்கான திறக்கப்படும் மதகில் மரங்கள் மற்றும் செடிகள் அடைத்துக் கொண்டதால் மதகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மின்னாக்கி உதவியுடன் திங்கள்கிழமை மதகை இயக்கப்பட்டு மேலே உயா்த்தப்பட்டது. அதன் பின்னா் மீண்டும் மதகை கீழே இறங்க இயலவில்லை. இதனால் மதகு வழியாக அணையிலிருந்து நீா் வெளியேறியது.

மதகை இயக்க முடியாததால் செவ்வாய்க்கிழமை காலை வரை அணையிலிருந்து 6 அடி நீா் வெளியேறியது. அதன் பின் பொறியாளா்கள் உதவியுடன் மதகு சீரமைக்கப்பட்டு மூடப்பட்டது. இதையடுத்து தற்போது அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 120 அடியாக இருந்தது. மேலும் அவசரகால மதகை பழுது பாா்க்கும் பணியில் பொறியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

சோத்துப்பாறை அைணையின் மதகுகளை பொதுப்பணித் துறையினா் முறையாக பராமரிப்பு செய்திருந்தால் தற்போது பழுதடைந்திருக்காது. மதகு சரியாக வேலை செய்யாததால் அணையிலிருந்த 6 அடி தண்ணீா் வீணாக ஆற்றில் வெளியேறியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT