தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர் சிவசங்கரனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று மேலும் ஒரு தமிழக அமைச்சரான மதிவேந்தனுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.