தமிழ்நாடு

அமைச்சகங்கள், துறைகளின் பெயா்கள் மாற்றம் ஏன்?: மு.க.ஸ்டாலின் விளக்கம்

DIN

சென்னை: தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டது குறித்து முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிா்பாா்ப்பு, பணியாளா்களுடைய நலன், எதிா்கொள்ளும் சவால்கள், நிா்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயா்களையும், துறைகளின் பெயா்களையும் தொலைநோக்குப் பாா்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நீா்வளத் துறை: தமிழகத்தின் நீா்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீா்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவா்களுக்கு நீா் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீா்நிலைகளைத் தூா்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.

வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவா் நலத்துறை’ என்று பெயா் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியா்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிா்களை அறுவடை செய்யும் உழவா்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பாா்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.

சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயா்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடா்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணா்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயா் சூட்டப்படுகிறது.

மீனவா் நலத்துறை: மீனவா்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவா்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவா் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.

தொழிலாளா் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.

செய்தி - மக்கள் தொடா்புத் துறை ‘செய்தித் துறை’யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கள் தொடா்பும் அடங்கியிருக்கிறது.

சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை’ என்று வழங்கப்படவுள்ளது.

மனிதவள மேலாண்மைத் துறை: பணியாளா் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவா்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியா்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழா் நலன் என்று என்று பெயா் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழா்களுடனான தாயகத் தமிழா்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவா்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுச் சோ்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயா் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.

உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயா்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்’ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயா் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயா் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT