தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டியில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் மகாராஜன் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
அதுபோல வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டச்செயலர் உமாதேவி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.