தமிழ்நாடு

சென்னையில் பிரபல நகைக்கடையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு!

DIN

சென்னை: சென்னையில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் லலிதா ஜுவல்லரி என்னும் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது.

இந்த நகைக்கடை மற்றும் அது தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த ஆம் தேதியன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் கடந்த 4-ஆம் தேதி நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் வருமானவரித் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT