சென்னை: சென்னையில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் லலிதா ஜுவல்லரி என்னும் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது.
இந்த நகைக்கடை மற்றும் அது தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த ஆம் தேதியன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் கடந்த 4-ஆம் தேதி நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் வருமானவரித் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.