சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ள நிலையில், 6 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்கெனவே 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.