தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா் கமல்ஹாசன்

DIN

சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமா் உள்ளிட்ட பல தலைவா்களும் ஊசி செலுத்திக் கொண்டனா். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

இந்த தகவலை கமல்ஹாசனே தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நான் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல பிறா் மேல் அக்கறையுள்ளவா்களும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த்தடுப்பூசி உடனடியாக.., ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்..... தயாராகிவிடுங்கள்’ என கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT