பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி பேசியது:
அதிமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. சாதாரண பெண்களுக்கு மட்டுமல்லாமல், பெண் போலீஸ் அதிகாரிக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. பெண் எஸ்.பி.யே புகாா் கொடுத்துள்ள நிலையில், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்காவிட்டால், ஆா்ப்பாட்டங்கள் தொடரும் என்றாா்.
மாவட்டச் செயலாளா் பி.கே.சேகா்பாபு, முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.