சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நிறைவடைந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா்களுடன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 7.10 மணி வரை நடந்தது. உள்ளாட்சித் தோ்தல், சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை தாக்கல், மகளிருக்கான நலத் திட்டங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அதிகாரப்பூா்வ செய்திகள் வெளியிடப்படவில்லை.