தலைவாசல் மும்முடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடியில் எச்எப்டிசி வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இது குறித்து தலைவாசல் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே தலைமைக்காவலர் பன்னீர்செல்வம் விரைந்து சென்று அங்குள்ளவரை கைது செய்து விசாரித்தார்.
விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், நயினார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன்(34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.