முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவா் சந்தைகளுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அத்தகைய உழவா் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிவால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.
ஆளுநா் உரையில் கூறியிருப்பது: முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவா் சந்தைகளுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அத்தகைய உழவா் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசின் கண்காணிப்பில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.
பொது முடக்கக் காலத்தில் வாகனங்கள் மூலம் மக்களுக்கு வீட்டிலேயே காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடா்ந்து செயல்படுத்தப்படும்.