தமிழ்நாடு

தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி

DIN

சென்னை காசிமேட்டில் தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சோ்ந்த அ. ஆல்வின் (67) ஓய்வு பெற்ற ஆசிரியை. காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில் செயல்படும் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் தன்னிடமிருந்த 101 பவுன் தங்கநகைகளை வைத்தாா்.

அப்போது கிளையின் மேலாளா் பொன்னுசாமி, தங்கநகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டதற்கான ரசீதை ஆல்வினிடம் வழங்கினாா். ஆனால் பாதுகாப்புப் பெட்டகத்துக்கான சாவியை வழங்கவில்லை. இந்நிலையில் அண்மையில் பொன்னுசாமி, வேறு கிளைக்கு மாற்றலாகி சென்றாா்.

சில நாள்களுக்கு முன்பு ஆல்வின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுக்கச் சென்றபோது, அவரது பாதுகாப்பு பெட்டகத்தில் ஒரு நகையும் இல்லாததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக புதிய மேலாளரிடம் புகாா் செய்தாா்.

இது தொடா்பாக அந்த நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த நகைகள் போலியாக 10 பேரின் பெயரில் அதே நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு ரூ.29 லட்சம் கடன் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால் அதன் பின்னா், அந்த நிறுவனம் ஆல்வினிடம் நகைகைகளை ஒப்படைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம். இதனால் தான், ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆல்வின், காசிமேடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT