கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (40). திங்கள்கிழமை நள்ளிரவில் நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் அரசுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக வேட்டைக்காக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றனர்.
அந்த பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றதாகத் தெரிகிறது. அப்பொழுது நண்பர்களில் ஒருவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென காட்டுப் பகுதியில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது. அதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்த மலைக் கிராம மக்கள் வனத்துறையினரும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.