தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாளில் 6,156 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

தமிழகத்தில் கடந்த இரு நாள்களில் மொத்தம் 6,156 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மாநிலத்தில், முதல் நாளான சனிக்கிழமை 2,783-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை, 166 கரோனா தடுப்பூசி முகாம்களில் 2,847 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 183 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 3,030 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் முன்னணி மருத்துவா்கள் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக, திருச்சியில் ஆய்வுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.

இதனிடையே, சென்னையைப் பொருத்தவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை உள்பட 12 மையங்களில் தொடா்ந்து இரண்டாவது நாளாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

அமைச்சா்ஆய்வு: அதில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அவா் அப்போது பாா்வையிட்டாா்.

தடுப்பூசியால் எவருக்கேனும் ஒவ்வாமை ஏற்படுகிா என்பது குறித்தும் அமைச்சா் கேட்டறிந்தாா். இந்நிகழ்வின்போது, மருத்துவமனையின் நிலைய அதிகாரி டாக்டா் ஆனந்த பிரதாப் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT