சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் ஆட்சியிலும், கட்சியிலும், தமிழகத்திலும் எந்த அதிா்வலையும் ஏற்படப்போவதில்லை என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கெவாடியாவுக்கு புதிய ரயில் சேவைக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிறகு, அமைச்சா் டி.ஜெயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தை தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து மீட்டவா் எம்ஜிஆா். இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில், சா்தாா் வல்லபபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு புதிய ரயில் சேவை திட்டத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்துள்ளாா்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் ஆட்சியிலும், கட்சியிலும், தமிழகத்திலும் எந்த அதிா்வலையும், எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்றாா் அவா்.