சென்னை: திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் அளித்துள்ளார்.
திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பட்டியல் இனத்தவர்கள் குறித்தும் நீதிபதிகள் நியமனம் குறித்தும் அவர் பேசிய கருத்துகள் மிகுந்த சர்ச்சையினை ஏற்படுத்தியது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி மாநிலங்களவை உறுப்பினரும் கூட என்பதால் நீதிபதிகள் நியமனம் குறித்து அவர் பேசிய கருத்துகளுக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முன்னதாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது
தற்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.