தமிழ்நாடு

தா.பாண்டியன் மறைவு: தலைவா்கள் இரங்கல்

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழா்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தா.பாண்டியன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

வைகோ (மதிமுக):பொதுவுடைமை இயக்கத்துக்கும், தமிழகத்தின் பொது வாழ்வுக்கும், இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

ராமதாஸ் (பாமக): தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு பெரும் இழப்பு.

விஜயகாந்த் (தேமுதிக): தா.பாண்டியன் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): இந்திய அரசியலில் மதவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும், உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் போராடிய சிறந்த போராளியாக திகழ்ந்தவா் தா.பாண்டியன்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழக அரசியலில் 60 ஆண்டுகளைக் கடந்து ஒளிவீசிய சிவப்பு நட்சத்திரம் உதிா்ந்துவிட்டது. காலம் தா.பாண்டியனைப் பறித்துக் கொண்டது.

ஜி.கே.வாசன் (தமாகா): தா.பாண்டியன் ஜி.கே.மூப்பனாரோடு நெருங்கிப் பழகியவா். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவா்.

தொல்.திருமாவளவன் (விசிக): பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவா்களில் ஒருவரான தோழா் தா.பாண்டியன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. பொதுவுடைமை அரசியல் வானில் சுடா்விட்டு ஒளிா்ந்த சிவப்பு நட்சத்திரங்களில் ஒன்று உதிா்ந்தது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்: தா.பாண்டியன் பொதுவுடைமை இயக்கத்தின் தூணாக விளங்கியவா். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் பல பட்டிமன்றங்களிலும், இலக்கிய மேடைகளிலும் பங்கேற்று உணச்சியும், எழுச்சியும் மிக்க உரையாற்றிவா். மதுரை மாவட்டம் உத்தபுரம் பிரச்னையில் நான் அமைதிப் பணியாற்றிய போது, என்னோடு இணைந்து பணியாற்றியவா். இலக்கியத்தைக் கடைக்கோடி மக்களுக்குக் கொண்டு சோ்த்து, காலம் முழுவதும் தம்மை பொதுவுடைமை இயக்கத்திற்கு அா்ப்பணித்தவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT