புதுச்சேரி: புதுச்சேரியில் வாட் வரியை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து புதுவை துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2020 ஆகஸ்ட் 29-ஆம் தேதி புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை செüந்தரராஜன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 2 சதவீதம் வாட் வரியை உடனடியாக குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக, புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.40 அளவில் குறைய வாய்ப்புள்ளது.
இந்த வரிக்குறைப்பினால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 71 கோடி வரை மக்கள் பயனடைவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.