திருவாடானை: திருவாடானை அருகே நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கி 364 ஆவது கிளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கினார்.
திருவாடானை அருகே நம்புதாளையில் தமிழ்நாடு கிராம வங்கி 364 ஆவது கிளை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வங்கியை திறந்து வைத்து வாடிக்கையாளரிடம் வைப்புத்தொகை பெற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கிராம வங்கி பொது மேலாளர் தாமோதரன், மண்டல மேலாளர் கண்ணன், பொது மேலாளர் தாமோதரன், கிளை மேலாளர் பாண்டிராஜ் , குலோத்துங்கன் மற்றும் வங்கி பணியாளர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர் கலந்து கொண்டனர்.
நம்புதாளையில் தமிழ்நாடு கிராம வங்கி 364 வது கிளை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாடிக்கையாளரிடம் வைப்பு தொகை பெற்றுக் கொண்டனர்.