தமிழ்நாடு

உசிலம்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முற்றுகை

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக காவல்துறையினர் கைது செய்தனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சந்தை திடலில் உள்ள உசிலம்பட்டி சட்டப்பேரவை  உறுப்பினர் அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கக் கோரிக்கை வைத்தும் தனியார்த் துறையில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தும் அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலையை 125 நாளாக மாற்றக் கோரிக்கை வைத்து மாவட்டத் தலைவர் காட்டுராஜா உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னசாமி மற்றும் தவமணி, நாகராஜ், மகாலிங்கம் திருக்க ராஜ், காந்தி முன்னணியில் மாநிலச் செயலாளர் முத்து காந்தாரி வாழ்த்திப் பேசினார்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து உசிலம்பட்டி   சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல்துறையினர் 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT