சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் புதன்கிழமை உயிரிழந்தார். இதன்மூலம், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 -ஆக உயர்ந்துள்ளது.
அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12 -ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கெனவே 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடி பகுதியைச் சேர்ந்த பா. ஜெயா (50), புதன்கிழமை உயிரிழந்தார்.
வெடி விபத்தில் காயமடைந்த 13 பேர் சாத்தூர் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.