தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக 60 சதவீத பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்படவில்லை. 

அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட 8 பணிமனைகளை சேர்ந்த சுமார் 60 சதவீத தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் 450 பேருந்துகளில் சுமார் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே வியாழக்கிழமை இயக்கப்பட்டன. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பேருந்து நிலையங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.  அதே நேரத்தில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகள் குறைவாக ஏற்பட்டதால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT