தமிழ்நாடு

இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை: தொழிற்சங்கம்

DIN

தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (பிப்.25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார்.

இதனால் வேலைநிறுத்தப் போராட்ட முடிவை கைவிட்டு ஊழியர்கள் நாளை பணிக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் இடைக்கால நிவாரணம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும், நாளை (பிப்.25) திட்டமிட்டபடி பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT