தமிழ்நாடு

பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர்: ஓ.பன்னீர் செல்வம்

DIN


பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் நரேந்திர மோடி என்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, அதிமுக அரசின் நடவடிக்கைக்கு பிரதமர் ஆதரவு அளித்து வருகிறார். 

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒத்துக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு இரண்டு முக்கிய ரயில்  திட்டங்களைக் கொடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும். 

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் தான்.

பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினராக இருந்தாலும் நல்லதை பாராட்ட தவறாதவர் பிரதமர் நரேந்திர மோடி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT