தமிழ்நாடு

ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்லலாம்: சசிகலா

DIN


சென்னை: நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
அதிமுக தலைமையகத்தில் அதிமுக தொண்டர்களான பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இனியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது. 

மேலும் தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தும்போதுதான் அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும். எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும். 

ஒரு இயக்கத்துக்கு தேவை கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.  நாம் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இன்று அதிமுக தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT