தமிழ்நாடு

கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞா் கைது

DIN

சென்னையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணாநகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (19), தன்னுடன் படிக்கும் மாணவியை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ஸ்ரீராம், வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம், தான் காதலிக்கும் மாணவிக்கு அனுப்பியுள்ளாா். இதனால் வேதனையடைந்த அந்த மாணவி, கடந்த 30-ஆம் தேதி டி.பி. சத்திரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிா் போலீஸாா், விசாரணை செய்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT