தமிழ்நாடு

ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம்

DIN


ஈரோடு:  உலக உடல் உறுப்பு தினத்தையொட்டி ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனையில் உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய வித்யா பவன்(பிவிபி) பள்ளியின் தாளாளர் டாக்டர் ராமக்கிருஷ்ணன், இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐஎம்ஏ) தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி வைத்து, உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பிய 50 நபர்களுக்கு, அதற்காக பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட உடல் உறுப்பு தான அட்டையை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதனை இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளான டாக்டர் செந்தில்வேலு, டாக்டர் பிரசாத், டாக்டர் அபுல் ஹசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக அபிராமி உமன்ஸ் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பூர்ணிமா சரவணன் வரவேற்றார். முடிவில், டாக்டர் தங்கவேலு நன்றி கூறினார்.

இதுகுறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது:

உலகில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் 9 நபர்களின் உயிர்களை காக்கலாம். நமது திசுக்களின் மூலம் 50 நபர்களின் வாழ்விற்கு உதவ முடியும். எங்களது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடல் உறுப்பு தான தினத்தையொட்டி எங்களது மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கும், டயலாசிஸ் மேற்கொள்பவர்களுக்கும் மூன்று நாள் இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறோம். எனவே, சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் புத்தகத்தை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முன்பதிவுக்கு 97981-69995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT