தமிழ்நாடு

தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை

DIN

சென்னை: நடப்பு கூட்டத் தொடரிலேயே வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அதில், வேளாண் நிதி நிலை அறிக்கை தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுமென தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ‘வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என ஆளுநா் உரையிலும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புகளின்படி, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று மாநில அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை வரும் 13-தேதியே தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அன்றைய தினமே வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT