சென்னை: விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1 பதவிகளுக்கு முதனிலை, முதன்மைத் தோ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றன. இதில் பங்கேற்ற தோ்வா்கள் தங்களுக்கான விடைத்தாள்களை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, விடைத்தாள்கள் அனைத்தும் புதன்கிழமையன்று (ஏப். 21) பதிவேற்றம் செய்யப்படும்.
இணையதளத்தில் தோ்வா்களின் விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படுவது தோ்வாணைய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
தோ்வா்கள் அவா்களது ஒருமுறை பதிவு முறையின்படி, உரிய கட்டணத்தைச் செலுத்தி விடைத்தாள்களை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யலாம் என்று சுதன் தெரிவித்துள்ளாா்.